Friday, October 20, 2006


காத்திருக்கிறேன்
this is my favourite poem. it is very special becoz it was published in aval vikadan long back.
உனக்காக கண் இமைக்காமல் காத்திருக்கிறேன்
உன்னால் கண் விழித்த இரவுகள் எத்தனை??
கனவிலும் நீ
கனவு கலைந்த பின்னும் நீ
வந்து வந்து போகிறாய்
வாட்டி வதைக்கிறாய்
காதலித்து ஏங்குபவர்கள் மத்தியில்
நீயோ வெறுக்க வைத்து ஏங்க வைக்கிறாய்
உனக்காகவே கரையும் என்னை
கரையேற்ற வந்துவிடு
எப்போதுமே என்னை திணற வைக்கும் என்
தேர்வு முடிவுகளே!

Saturday, October 14, 2006


திக் திக் நிமிடங்கள்
மதிய வேளை 2 மணி..ஒரு குறுகிய மலை சாலையின் ஹைர்பின் வளைவு. ஹைர்பின் வளைவுக்கு அருகே உயர்ந்து நின்று மிரட்டும் ஓரு ஆலமரம்.சாலையைவிட்டு சற்று இறங்கினாலும் தலையைச் சுற்ற வைக்கும் கிடுகிடு பள்ளத்தாக்கு..எங்குப் பார்த்தாலும் முட்புதர்கள்.அந்த முட்புதர்களுக்கு இடையே அப்பளமாய் TATA SUMO .அருகில் உடல் சிதைந்து இரத்த வெள்ளத்தில் நான்கைந்து இளைஞர்கள்.சுமோவுக்கு உள்ளேயும் வெளியேயுமாய்க் கிடந்தார்கள்..இரத்தத்தை உறைய வைக்கும் கோர விபத்து.இதை அப்படியே படம்பிடித்தேன் என் கேமராவில்..நான் விவேக்..NEWS REPORTER!!
கடந்த இரண்டு மாதத்தில் இதே இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள்..காரணம்?? யோசிக்கையிலேயே வெயில் மண்டையை தாக்கியது.ஆலமர நிழலில் ஓதுங்கினேன்.அண்ணாந்து பார்த்தேன் ஆலம் விழுதுகளை.
பல நினைவுகள் வந்து போயின
சுள்ளென்று ஒரு அடி முதுகில் விழுந்தது.வலி தாங்காமல் திரும்பினேன்.என்னை அடித்துவிட்டு அழகாய் சிரித்தாள் திவ்யா!என் சக NEWS REPORTER.என்ன விவேக்!! இப்படி முழிக்கிற?? என்றாள்!
இல்ல திவ்யா!இதே இடத்துல இந்த
ஆலமரத்துல ஒரு இளம்பெண் இரண்டு மாசத்துக்கு முன்னாடி தூக்குல தொங்கினாள்!நான்தான் அதையும் போட்டோ எடுத்தேன்.அதற்கு அப்புறம் இங்கு பல விபத்துக்கள்..அதான் யோசித்து கொண்டு இருந்தேன் என்றேன்.
இதுல யோசிக்க என்ன இருக்கு?
விபத்துக்கான காரணங்கள் பல
குறுகிய சாலை,இரவு நேர மங்கலான வெளிச்சம்,மது அருந்திவிட்டு ஓட்டுதல் இப்படி பல..
ரொம்ப யோசிக்காத சீக்கிரமா போட்டோ எடுத்துவிட்டு வந்து சேரு!இன்னும் 2 PRESS மீட் போகனும் என்று கூறிவிட்டு தன் KINETIC HONDAவில் பறந்துவிட்டாள்
திரும்பி பார்த்தேன் பள்ளத்தாக்கை! அங்கிருந்த ஓவ்வொரு சடலத்தையும் AMBULANCEல் ஏற்றினார்கள்.அட!எத்தனை உயிர்ப்பலி இங்கே! ஏனோ தெரியவில்லை தூக்கில் தொங்கிய அந்த பெண்ணின் முகம் மனதில் நிழலாடியது
தூரத்தில் ஓரு டீ கடை கண்ணில் பட்டது அங்கு சென்று அமர்ந்தேன்!டீ கேட்டுவிட்டு கடைக்காரனிடம் பேச்சு கொடுத்தேன்!
"அந்தப்பொண்ணு தூக்குல தொங்கினதுல இருந்து இந்த இடமே இரத்தம் குடிக்க ஆரம்பிச்சிடுச்சுங்க!இராத்திரில நடமாட முடியல! வயசுபசங்க எல்லாம் செத்து போறாங்க!
ஊர்க்காரங்க இரண்டு மூனு பேரு இராத்திரில ஆலமரம் பக்கம் ஓரு பொண்ணு நிக்குறானு வேற சொல்லுறாங்க!பயத்துல இப்ப எல்லாம் டீ கடையை சாயங்காலம் 6 மணிக்கே சாத்திடுறேன்!" என்றான்.
சின்ன வயதில் பாட்டி சொன்ன பேய்க் கதைகள் வந்து பயமுறுத்தின.எனது YAMAHA BIKEயை START செய்து உடனே இடத்தை விட்டு அகன்றேன்!
இரவு 10மணி! எனக்குள் குறுகுறுப்பு பழைய செய்திதாள்களைச் சேகரித்தேன்.அந்த இடத்தில் விபத்தில் இறந்தவர்கள் எல்லோரும் இளைஞர்கள்???நெஞ்சில் ஓரு பயம் பரவியது.
மனதை திசை திருப்ப டிவி பார்த்தேன்.11 மணி அளவில் செல்போன் அலறியது!
"சார் நீங்க கொடுத்த NEGATIVES ஏதுவுமே சரியில்ல! PHOTOS ஏதுவுமே விழவில்லை நாளைக்கு NEWS PUBLISH பண்ணனும்!ATLEAST அந்த ACCIDENT PLACE போட்டோஸ் வேணும் இப்ப!எப்படியாவது வேற தாங்க சார்"என்றான் பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து ராம்...சரி என்றேன்..


BIKEயை கிளப்பி அந்த ஹைர்பின் வளைவை நோக்கிப் போனேன்.டீ கடைக்கு அருகிலேயே பைக்கை நிறுத்திவிட்டு அந்த ஆலமரம் நோக்கி ந்டந்தேன்!!கால்கள் நடுங்கியது!எங்கும் இருட்டு! கண்ணை மறைக்கும் பனி! மயான அமைதி!என் கையில் TORCH மற்றும் CAMERA!TORCH அடித்து LOCATION பார்த்தேன்.CAMERA FLASH அழுத்தினேன்.PHOTOS READY!

BIKEயை நோக்கித் திரும்புகையில் முட்புதர்களுக்குள் ஏதோ சத்தம்!சிறு முனகல்! அதைத் தொடர்ந்து ஓரு பெண் குரல் !தெளிவாக என் பெயரை உச்சரித்தது! விவேக்! விவேக் ! என்று...தூக்கில் தொங்கிய அந்த பெண்ணா??

பயத்தில் இரத்தம் உறைந்துவிட்டது!ஒடிச்சென்று பைக்கை கிளப்பினேன்.NEGATIVE ROLLயை பத்திரிக்கை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வீடுவந்து சேர்ந்தும் பயம் நீங்கவில்லை!இரவு முழுவதும் பயங்கர கனவுகள் தூக்கத்தை கலைத்தன!


காலை 6 மணிக்கு மீண்டும் செல்போன் அலறியது!
மீண்டும் மறுமுனையில் ராம்,"சார் அந்த ஹைர்பின் வளைவுல இன்னொரு ACCIDENT ஆம் சார்!நியூஸ் COLLECT பண்ணிடுறிங்களா சார்??என்றான். சரி!நீயும் என்னுடன் வா என்று அவனையும் அழைத்துக்கொண்டு ஹைர்பின் வளைவு நோக்கி பைக்கில் சென்றேன்.
AMBULANCE,POLICE ஜீப் என்று சாலை நிரம்பி வழிந்தது ஓரமாய் பைக்கை நிறுத்திவிட்டு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றேன்.

கேமராவில் கோணம் பார்த்தேன்.அதிகாலை நேரம் !செவ்வானம் பளபளத்தது!அதற்கு போட்டியாக முட்புதர்களில் தெளித்த இரத்தம் கண்ணை பறித்தது!முட்புதர்களுக்குள்……………… நசுங்கிய KINETIC HONDAஅதனருகே உயிரற்று உருக்குலைந்த நிலையில் திவ்யா!!!!!!!!!!!!!
எப்படி இது????????????????????
"ஐயோ சார் நேத்து உங்களுக்கு முன்னாடி திவ்யா மேடத்துக்கு போன் பண்ணிப் போட்டோஸ் கேட்டேன்.அவங்க போட்டோஸ் எடுக்க வந்தப்ப ACCIDENT ஆயிடுச்சு போல சார்" என்று அலறினான்..
..அப்ப நேற்றிரவு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த திவ்யா தான் என் பெயரைச் சொல்லி அழைத்தாளா??ஐயோ! நெஞ்சு வெடித்தது எனக்கு!!

Wednesday, October 11, 2006

துரத்தும் நிழல்கள்
this is my first attempt towards short story.plz give ur comments.

லண்டன்,25 september,westminster bridge,இரவு 12.30 மணி.தடதடக்கும் இதயத்துடிப்புடன் முச்சிரைக்க ஓடி வந்து நிமிர்ந்தேன்.நான் சந்தோஷ்!aeronatical enginner.தற்போது வசிப்பதோ லண்டனில்.மனம் கொதித்தது நண்பன் பிரவினை நினைத்து!பாவி பிரவின்!பழி வாங்கிட்டியேடா!!துரோகி!indian defence force சம்பந்தப்பட்ட முக்கியத்தகவல் என்னிடம் இருப்பதை எப்படியோ தெரிந்துக்கொண்டான்.இப்போது அவன் கையில் அகப்பட்டால்??இராணுவ ரகசியம் உளவாளிக்குப் போய்விடும்!!நிலவொளியில் பளபளத்தது westminster bridge.என் தவிப்பு தெரியாமல் அழகாய் ஓடியது தேம்ஸ் நதி!அங்கங்கே அங்கங்கே சில வெள்ளையர்கள்!என்னைத்தான் பார்க்கிறார்களோ?மணி 12.35,அவனிடம் தப்பி வந்து 5 நிமிடம் ஆகிறது! ம்ம்ம்!சிறு வயதில் பயின்ற அத்லெடிக் ஓட்டம் உதவி!அவனால் என்னைபிடிக்க இயலவில்லை!சட்டென்று திரும்பினேன் !தூரத்தில் அவன்!.என்னை நோக்கி ஓடி வருகிறான்...

மறுபடியும் ஓடத்தொடங்கினேன்..என்னை சுற்றி வளைத்தது ஓரு போலீஸ் கார்.எங்கும் ஸைரன் சத்தம்..துரோகி பிரவின்!என்னை சிக்க வைத்துவிட்டான்! இவர்களிடம் சிக்கித் தாய் மண்ணுக்குத் துரோகம் செய்வதா?இல்லை உயிரைக் கொடுப்பதா?
சட்டென்று குதித்தேன் தேம்ஸ் நதிக்குள்.இரவு நேரப் பனியில் தண்ணீர் கத்தியாய்க் குத்தியது!சிறு வயது நீச்சல் பயிற்சி கைக்கொடுத்தது.மின்னலாய் நீந்தினேன் தீடிரென்று வானத்தில் வெளிச்சம்,ஹெலிக்காப்டர் சத்தம்,british marine unit என்னை நோக்கிப் பாய்ந்தது.ஐயோ! அகப்பட்டுக்கொண்டேனே!தண்ணீருக்குள் இருவர் குதித்து என்னை அலாக்காய்த் தூக்கினர்!சுருக்கென்று ஏதோ குத்தியது..ஓ மயக்க ஊசியோ?மயங்கும் வேளையில் இடியாய்த் தாக்கியது அவள் ஞாபகம்! ப்ரியா! ப்ரியா! என் ஆரூயிர்க்காதலி ப்ரியா!என்ன ஆனாய் நீ? ! உன்னையும் கடத்திவிட்டார்களோ?

தூக்கத்தில் நடப்பது போல் நடந்தேன்.என்னை ஏதோ விமானத்தில் ஏற்றினார்கள்..எங்கும் வினோத மனிதர்கள்!என் கண்கள் ஏங்கின என் ப்ரியாவுக்காக!
நல்ல தூக்கம்,என்னைத் தட்டி எழுப்பினார்கள்,ஓரு அறைக்குள் இழுத்துச் சென்றனர். அங்கே சாதுவாய் அமர்ந்திருந்தான் என் நண்பன் பிரவின்!! துரோகி! ஓரு வெள்ளை கோட்டு போட்ட ஆசாமி என்னைப்பார்த்து சிரிக்கிறான்! சந்தோஷ்! எங்க இருக்கிங்கன்னு தெரியுதா? என்றான்!விட்டேத்தியாக்ச்சிரித்தேன் அவனைப்பார்த்து ஏன் என்னை கடத்திய உனக்குத் தெரியதா? என்றேன் .வெளியே அமருங்கள் என்றான்! வெளியே சென்றுவிட்டேன்!
அறைக்கு வெளியே,நாற்காலியில் அமர்ந்தேன்
உள்ளே என்ன நடக்கிறது? இந்த சின்ன சின்ன அறைக்குள் ப்ரியாவை மறைத்து வைத்திருக்கிறார்களா? நேற்று அப்துல் கலாம் என்னிடம் சொன்ன ரகசியத்தைக் கேட்டுச் சித்திரவதை செய்வார்களோ? எங்கேயோ குரல் கேட்கிறது அது என் ப்ரியாவுடையது தான்! ப்ரியா ! ப்ரியா! ஏங்கு இருக்கிறாய் நீ?
அறைக்குள் பிரவின்: நல்லாத்தான் இருந்தான் சார் லண்டன் வந்தபோது , பிறகு தனக்குள் பேசறது சிரிக்கிறது என்று ஆரம்பிச்சுட்டான்!ப்ரியானு ஓரு பொண்ணை காதலிச்சான் ஆனால் அவள் கல்யாணம் ஆகி போன பிறகும் அவ இங்கதான் இருக்கானு ஊளற ஆரம்பிச்சுட்டான்..தனக்குள்ள பெரிய ரகசியம் இருக்கு! அதை தெரிஞ்சுக்க நான் அவ்னை துரத்துறேனு நினைக்கிறான்! நேத்து வீட்டை வீட்டு ஓடிப்போய் தேம்ஸ் நதிக்குள்ள குதிச்சுட்டான்..பெரிய சீக்கல் ஆயிடுச்சு அதான் மறுபடியும் இவனை இந்தியா அழைச்சுட்டு வந்துட்டேன் என்றான் .
இது ஓரு மனநோய் SCHIZOPHRENIA னு சொல்லுவோம் .சந்தோஷ்க்கு இந்த மனநோய் இருக்கு என்றார் அந்த வெள்ளை கோட்டு போட்ட டாக்டர்!