Friday, January 19, 2007

Hi All, this my recent thriller..enjoy..dnt forget to post ur comments



இருளுக்குள் யார்???



பெங்களூர்( Bangalore) , ஜனவரி 30, 12.am..
எங்கும் இருள் ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ,அதில் எறும்பாய் ஊர்ந்து சென்றது எனது மாருதி கார்.குளிருக்கு பயந்து கார் ஜன்னல் கதவை திறக்கவில்லை நான் .

நான் சுரேந்தர்..சொந்த ஊர் சென்னை..இப்போது வேலைக் காரணமாக பெங்களூர் வாசம்..இரண்டு நாள் விடுப்பு எடுத்து சென்னை சென்றுவிட்டு இன்று தான் வீடு திரும்புகிறேன்

அதோ வந்துவிட்டது வீடு..பெரிய காம்பவுண்டு சுவருக்கு முன் இரண்டு ஆள் உயர கேட்.

கேட் அருகே காரை நிறுத்தினேன்..மெல்ல கேட்டை திறந்தேன்(உள்ளே தாளிடவில்லை! எப்போதும் அப்படித்தான்! திருட்டு பயம் இல்லை!! ஏன் ? திருடர்களுக்கே இங்கே வர பயம் தான் )
6 மாதம் முன்பு ,ஒரு பெரிய பங்களா 3000 ரூபாய் வாடகைக்கு வருது..ஒகே வா?? என்று கேட்டான் என் நண்பன் பீட்டர். சந்தோசத்தில் தலையாட்டினேன்..எப்படி இது? வந்து பார்த்த போது அறிந்து கொண்டேன்.
பேய் பங்களா ,haunted house என்று பல பெயர்கள் இந்த வீட்டுக்கு!!
இதற்கு முன்பு இங்கு இருந்தவர்கள் எல்லாம் அற்ப வயதில் இறந்துவிட்டார்களாம்..பல கதைகள் இந்த வீட்டை பற்றி உலா வந்தன..
பீட்டர் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தான்..என்னடா பயமா இருக்கானு ?? இல்லடா ! எனக்கு ஒகே என்றேன்.
நான் ,பீட்டர், வைத்தியநாதன் மூவரும் குடி வந்தோம் .. வந்த ஓரு மாதத்திலேயே வைத்தி எதையோ பார்த்து பயந்து ஓடிவிட்டான்..அவன் அப்படிதான் ஆபீஸில் அனைவரும் அவனை கிண்டல் செய்வோம்.
அவன் சென்ற பிறகு 5 மாதமாய் நானும் பீட்டரும் மட்டும் தான் இங்கே
இரண்டு நாள் சென்னை சென்றுவிட்டு இன்று தான் வருகிறேன்
கேட்டை திறந்தால் நிலவொளியில் பளிச்சிட்டது பங்களா! எந்த ஓரு விளக்கும் வீட்டிற்குள் எரியவில்லை!
மணி 12.30, இப்போது பீட்டர் தூங்கிக் கொண்டிருப்பான்..காரை நிறுத்திவிட்டு மாற்று சாவிக் கொண்டு விட்டைத் திறந்தேன்..எங்கும் இருட்டு ..கண்களுக்கு இருள் பழகிய பின்..சுற்றும் மூற்றும் பார்த்தேன்..அறையோரத்தில் யரோ நிற்பது போல் இருந்தது..பீட்டர் ??? என்றேன் பதில் இல்லை


சட்டென்று திரும்பி லைட்டை போட்டேன்..வெறிச்சொடி கிடந்தது அறை …….யாரும் அருகில் இல்லை..யாரது?? பீட்டரா?? இல்லை யாரோ இருப்பது போல் மன பிரமையா? தெரியவில்லை..

இது முதல் முறை அல்ல
இப்படிதான் பலமுறை யாரோ நிற்பது போல் தெரியும் லைட் ஆன் செய்தால் யாரும் இருப்பது இல்லை..கதவை சாத்திவிட்டு என் அறைக்குச் சென்றேன் கொண்டு வந்த பொருட்களை மேஜையில் வைத்துவிட்டு பீட்டர் அறை நோக்கி சென்றேன்.
கதவு சாத்தி இருந்தது..பீட்டர் !! பீட்டர்!! என்றேன்..பதில் இல்லை, பின்பு லேசாக முனகல்..ஓ !! தூங்குகிறான் போல! தூக்கத்தில் எழுப்பினால் கண்டபடி திட்டுவான் ஓழுங்கு மரியாதையாக என் அறைக்கு வந்துவிட்டேன்.
மேஜை நாற்காலியில் அமர்ந்து ….. ,கொண்டு வந்த பைல்களை அடுக்கினேன்.யாரோ பின்புறமாய் என்னை பார்ப்பது போல ஒரு உணர்வு! எனக்கு பின்னால் ஜன்னல் இருக்கும்..ஜன்னலுக்கு வெளியே ?? யார்??
மெதுவாய் திரும்பினேன் குளிர்காற்றில் நடனமாடியது ஜன்னல் கதவு

வெளியே கும்மிருட்டு..உற்றுப் பார்த்தேன் யாரும் இல்லை..ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு படுக்கையில் சாய்ந்தேன்.

மணி 1.30 am..என்னவோ தெரியவில்லை..இன்று மனமே சரியில்லை! ஏதோ தப்பு நடக்க போவது போல் ஓரு உணர்வு..
இந்த வீட்டில் நடக்கும் பல சம்பவங்கள் விசித்திரமாக உள்ளது!
பீட்டரும் நானும் விளையாடிவிட்டு சிதறி போட்ட சீட்டு கட்டுக்கள் மாலை நாங்கள் இருவரும் வரும்போது அடுக்கப்பட்டிருக்கும்
என்ன பீட்டர்? நீ அடுக்கினாயா? என்று கேட்டால் பீட்டர் நக்கலாய் சிரித்து ஆமாம்டா ஆபிஸ்ல பாதி வேலையில அடடா கார்ட்ஸ் அடுக்க மறந்துட்டேனேனு பீல் பண்ணி வீட்டிக்கு வந்து அடுக்கிட்டு போனேன் என்பான்.
இப்படித்தான் இந்த வீட்டில் நான் வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருப்பது இல்லை..எனக்கு மட்டும் தான ??
இல்லை!!! பீட்டருக்கும் தான்..காலையில் அவன் ஷுவை கண்டுபிடிக்கவே அவனுக்கு பாதி நேரம் போகும்
ஏதோ இந்த வீட்டில் வித்தியாசமாக உள்ளது என்று இருவரும் உணர்ந்தோம் ஆனால் ஏனோ அதை இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை

ஒரு நாள் ஓய் ஜா (OUIJA) போர்டு வரைந்து பீட்டர் ஆவியை அழைக்கிறேன் என்று கூத்தடித்தான்.ஒரு தம்ளரை இங்கும் அங்குமாய் நகற்றினான்.டேய்! ஆவி நகர்த்துடா என்று நக்கலடித்தான்.உண்மையில் இதில் எல்லாம் அவனுக்கு நம்பிக்கை உண்டா ? தெரியவில்லை எனக்கு..

பக்கத்து அறையில் ஒரே சலசலப்பு ..என் நினைவோட்டத்தை கலைத்தது. பாத்ரூமில் தண்ணிர் திருகிவிடும் சத்தம்.பீட்டர் எழுந்துவிட்டானா ?மணி 1.45 am
தண்ணிர் சத்தம் நின்றபாடில்லை..என்ன செய்கிறான் தண்ணீரில் இவ்வள்வு நேரம் ??
குளிக்கிறான நடுராத்திரியில்? செய்தாலும் செய்வான்..
பீட்டர் நீ ஒரு குழப்பவாதி
சிரித்துக் கொண்டு மெல்ல உறங்க ஆரம்பித்தேன் ,தண்ணீர் சத்தமும் நின்றது!
காலை 7 மணி! குளித்துவிட்டு நான் ரெடி.டீ கொடுக்கும் பையனும் வந்துவிட்டான்! இன்னும் பீட்டர் எழுந்தபாடில்லை..என்ன செய்கிறான் இன்னும்? டீ பையன் கதவை தட்டிவிட்டு அறை உள்ளே சென்றான்..பின்பு வீல் என்று ஒரு சத்தம்..
போலிஸ் ஜீப் , அம்புலன்ஸ் எல்லாம் வந்தது,குளியல் அறைக்குள் விறைத்துப் போய் சடலமாய் கிடந்த பீட்டரை எடுத்து சென்றார்கள்..கூடவே என்னையும் இழுத்துச் சென்றார்கள்..எல்லோரும் என்னை கொலைக்காரன் என்பது போல் பார்த்தனர்..பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்த என் பெற்றோரை தவிர..
போலிஸ் ஸ்டேஷனில் என்னை கேள்வியால் சாகடித்தார்கள்..
பீட்டர் போஸ்மார்ட்டம் ரீப்போர்ட் வந்தது..
குளியல் அறைமின்சாரக் கசிவு தான் அவன் சாவிற்கு காரணம் மேலும் அவன் இறந்து இரண்டு நாட்கள் ஆகிறது என்றனர்.
இரண்டு நாட்கள் நான் சென்னையில் இருந்ததற்கு ஆதாரம் இருந்ததால் என்னை விட்டுவிட்டனர்
ஒரே மர்மாய் இருந்தது பீட்டர் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்துவிட்ட்டான் என்றால் நேத்து நான் வந்த போது பக்கத்து அறையில் இருந்து வந்த சத்தத்திற்கு என்ன அர்த்தம் ?? போலிஸிடம் சொல்லி மேலும் குழப்ப வேண்டாம் என்று வந்துவிட்டேன்
போலிஸ் கேஸ் முடிந்து வீட்டிற்கு வந்தேன் . டேய் ! அந்த வீடு வேண்டாம் மறுபடியும் அங்கேயே தங்காதே என்றனர் நண்பர்கள் .அவர்களுக்கு என்ன தெரியும் ? வீட்டுக்காரன் அட்வான்ஸ் திருப்பித் தர மறுக்கிறான் ,,ஓரு மாதம் அவகாசம் வேண்டுமாம் . என்னிடமும் போலிஸ் கேஸ் என்று செலவழித்ததால் பாக்கெட் காலி !வேறு வழியில்லை !! ஒரு மாதம் இந்த வீடுதான்..
வீட்டிலிருந்த சீட்டுக்கட்டுக்கள், சோபா செட் ,இயேசு கிறிஸ்து படம் எல்லாம் பீட்டரையே ஞாபகப்படுத்தியது .முகத்தில் ஒரு அலட்சிய சிரிப்புடன் வளைய வருவான்..எப்படி இருந்தவன் ? அவன் சடலமாய் விறைத்துப்போய் கண்கள் பிதுங்கி!!ஐயோ வேண்டாம் ரீ கால் (RE CALL) செய்யாதே! என்றது மனது!
இரவு 8 மணி அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு வந்தேன்..என்னமோ தெரியவில்லை அம்மா கொடுத்த மந்திர கயிற்றை கயில் கட்டிக் கொண்டேன்.
டிவியை போட்டேன்..சேனல்கள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தது .. நான் போட்டவுடன் வரும் ஸ்போர்ட்ஸ் சேனலை காணவில்லை..இது என்னுடைய டிவி..பீட்டர் டிவி பார்க்க மாட்டான்..யார் என்னைத்தவிர மாற்றிருப்பார்கள் ??
ஒரு வேளை பீட்டர் தானோ? குழம்பாதே விட்டுவிடு என்றது மனது..
திரும்பவும் ஏதோ நடக்கப்போவது போல் ஒரு உணர்வு. 10 மணிக்கு எல்லாம் என் அறைக்கு சென்று படுத்துவிட்டேன்
தூக்கம் வரவில்லை..என்ன நடக்கிறது இங்கே? பேயா? ஆவியா? மர்ம மனிதனா? தெரியவில்லை எனக்கு..
அந்த கண்ணுக்கு தெரியாத உருவத்தைக் கண்டு பயப்படத் தொடங்கினேன்..



மனதை மாற்ற அத்தைப் பெண் கல்யாணியை நினைக்கப் பார்த்தேன் ..நோ யூஸ்!! (NO USE) பாத் டப்பில் கண் பிதுங்கி இறந்து போன பீட்டர் தான் கண்முன் வந்தான்!!
மணி 12 .30 am
திடிரென்று பக்கத்து அறையிலிருந்து சலசலப்பு..தொடர்ந்து தண்ணீர் சத்தம்..யாரது???????????
நிமிடங்கள் கரைந்தன..
தண்ணீர் சலசலப்பு அதிகரித்தது..மேலும் பக்கத்து அறையில் யாரோ அங்கும் இங்கும் அசையும் சத்தம்.என் அறை கதவு தாழிட்டு இருந்தது..
பக்கத்து அறைக்குப் போய் என்னவென்று பார்ப்பதா? இல்லை இங்கேயே விடியும் வரை பயத்துடன் தவிப்பதா? இங்கே இரு என்றது என் உள் மனம்..என்னவென்று பார் என்று விரட்டியது தைரியம்..
என் அறைக்கதவு தாழ்பாழை திறந்து பீட்டர் அறை அருகே சென்றேன்....பாதி திறந்த நிலையில் இருந்தது அறைக்கதவு …கதவை தள்ளி உள்ளே சென்றேன்..காலில் ஈரம்..குளியல் அறையிலிருந்து தண்ணீர் வழிந்து அறை முழுவதும் தேங்கிருந்தது..
மெல்ல நடந்தேன்..
தண்ணீர் சத்தம் குளியல் அறையிலிருந்து வந்து கொண்டேயிருந்தது..
குளியல் அறை நோக்கி சென்றேன்...என் இதய துடிப்பு எகிற தொடங்கியது..
மெல்ல குளியல் அறைக்கதவை திறந்தேன்..உள்ளே பைப், ஷவர், பாத் டப்பிலிருந்து தண்ணீர் சீறீப்பாய்ந்தது..உற்று நோக்கினேன் பாத் டப்பிற்குள் இருளில் ஒரு உருவம்....யாரது??? பீட்டரா??????????????? ஆ ஆ ஆ ஆ ஆ?????????
மறுநாள் காலை..ஜி.எச்..மார்சுவரி..(GH MORTUARY) அழுது வடிந்த முகத்துடன் சுரேந்தர் பெற்றோர் மற்றும் நண்பர்கள்..
சுரேந்தர் போஸ்மார்ட்டம் ரீப்போர்ட்ல சடன் கார்டியாக் ஆரஸ்ட் (SUDDEN CARDIAC ARREST) னு வந்திருக்கு..கொலையோ தற்கொலையோ இல்லை என்றனர் காவல்துறை..
நாங்க எல்லாம் அப்பவே சொன்னோம் அந்த பேய் பங்களாவுல தங்காதிங்கடானு அவனுங்க இரண்டு பேரும் கேட்கல.. என்று கதறினர் நண்பர்கள்..
ஆமாம் நானும் அப்பவே சொன்னேன் என்று அவர்கள் கூடவே சேர்ந்து தலையாட்டினான் வைத்தி!! சுரேந்தரையும் பீட்டரையும் அணுஅணுவாய் நடுங்க வைத்து யாரும் அறியாமல் அழகாய் கொன்றுவிட்ட சூப்பர் டுப்பர் சைக்கோ கில்லர் வைத்தி என்ற வைத்தியநாதன்..


13 Comments:

Blogger FunScribbler said...

சூப்பரா இருக்கு! அது எப்படிங்க இப்படி நாடி நரம்பு எல்லாம் பயமுறுத்துற மாதிரி எழுதுறீங்க. ரொம்ப நல்லா இருந்துச்சு! தூள் கிலப்புங்க!உங்க அடுத்த கதை சிக்கிரம் release பண்ணுங்க.. waiting for it anxiously!

4:19 AM  
Anonymous Anonymous said...

Very superb. Good thriller. But final touch is should be some what triller as of now. Keep it up

12:24 AM  
Blogger reena said...

Hello...I'm someone who doesnt usually read tamil stories but I really enjoyed the haunted house story. Took abit of time to finiah it though. Will come back for more stories. Keep writing. I've linked you in my blog as well. Good work!

12:11 AM  
Blogger Unknown said...

Hi Bharathi...
I think you gotta right name.Keep it up.
" Kan malarum un Kavithai Kulanthaigal....
Kaviyangal agattum...."

All the best..

Bala.......

4:09 PM  
Blogger Arun Kumar said...

த்ரில்லை கதை நன்றாக இருந்தது. என் பின்னால் வைத்து நிற்பதாக அரை மணி நேரம் நினைத்து கொண்டுஇருந்தேன் ;)

8:54 AM  
Blogger svix said...

gud ones... but would be a lot better if the tamil fonts were something we're used to... these letters look very different than the usual paper prints...

11:43 AM  
Anonymous Anonymous said...

very good thriller story. i enjoyed reading this thriller story.

7:34 PM  
Blogger Unknown said...

Good thriller, good flow but the final touch is some what with out salt and mirchi...but reall good creativity....keep it up...
Dr Elanthendral.

1:48 PM  
Anonymous Anonymous said...

Hey... wish it was in English for everyone to understand!! Ur blog looks preety interesting, please write stuff in english too!!

4:30 PM  
Blogger N Suresh said...

Hi

it was nice to read

Good!

3:13 AM  
Blogger Jerciline Sundar said...

The story is nice, but the conclusion is not so thrill. People will forget this story after some time. You have to write the way it remains in their mind for a long time.

12:06 AM  
Anonymous Anonymous said...

Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!

5:11 PM  
Anonymous அருள் said...

கலக்குறீங்க பாரதி! வாழ்க வளமுடன்!! உமது தமிழ் பணி தடையறாது தொடர வாழ்த்துக்கள்...

10:19 AM  

Post a Comment

<< Home