Wednesday, October 11, 2006

துரத்தும் நிழல்கள்
this is my first attempt towards short story.plz give ur comments.

லண்டன்,25 september,westminster bridge,இரவு 12.30 மணி.தடதடக்கும் இதயத்துடிப்புடன் முச்சிரைக்க ஓடி வந்து நிமிர்ந்தேன்.நான் சந்தோஷ்!aeronatical enginner.தற்போது வசிப்பதோ லண்டனில்.மனம் கொதித்தது நண்பன் பிரவினை நினைத்து!பாவி பிரவின்!பழி வாங்கிட்டியேடா!!துரோகி!indian defence force சம்பந்தப்பட்ட முக்கியத்தகவல் என்னிடம் இருப்பதை எப்படியோ தெரிந்துக்கொண்டான்.இப்போது அவன் கையில் அகப்பட்டால்??இராணுவ ரகசியம் உளவாளிக்குப் போய்விடும்!!நிலவொளியில் பளபளத்தது westminster bridge.என் தவிப்பு தெரியாமல் அழகாய் ஓடியது தேம்ஸ் நதி!அங்கங்கே அங்கங்கே சில வெள்ளையர்கள்!என்னைத்தான் பார்க்கிறார்களோ?மணி 12.35,அவனிடம் தப்பி வந்து 5 நிமிடம் ஆகிறது! ம்ம்ம்!சிறு வயதில் பயின்ற அத்லெடிக் ஓட்டம் உதவி!அவனால் என்னைபிடிக்க இயலவில்லை!சட்டென்று திரும்பினேன் !தூரத்தில் அவன்!.என்னை நோக்கி ஓடி வருகிறான்...

மறுபடியும் ஓடத்தொடங்கினேன்..என்னை சுற்றி வளைத்தது ஓரு போலீஸ் கார்.எங்கும் ஸைரன் சத்தம்..துரோகி பிரவின்!என்னை சிக்க வைத்துவிட்டான்! இவர்களிடம் சிக்கித் தாய் மண்ணுக்குத் துரோகம் செய்வதா?இல்லை உயிரைக் கொடுப்பதா?
சட்டென்று குதித்தேன் தேம்ஸ் நதிக்குள்.இரவு நேரப் பனியில் தண்ணீர் கத்தியாய்க் குத்தியது!சிறு வயது நீச்சல் பயிற்சி கைக்கொடுத்தது.மின்னலாய் நீந்தினேன் தீடிரென்று வானத்தில் வெளிச்சம்,ஹெலிக்காப்டர் சத்தம்,british marine unit என்னை நோக்கிப் பாய்ந்தது.ஐயோ! அகப்பட்டுக்கொண்டேனே!தண்ணீருக்குள் இருவர் குதித்து என்னை அலாக்காய்த் தூக்கினர்!சுருக்கென்று ஏதோ குத்தியது..ஓ மயக்க ஊசியோ?மயங்கும் வேளையில் இடியாய்த் தாக்கியது அவள் ஞாபகம்! ப்ரியா! ப்ரியா! என் ஆரூயிர்க்காதலி ப்ரியா!என்ன ஆனாய் நீ? ! உன்னையும் கடத்திவிட்டார்களோ?

தூக்கத்தில் நடப்பது போல் நடந்தேன்.என்னை ஏதோ விமானத்தில் ஏற்றினார்கள்..எங்கும் வினோத மனிதர்கள்!என் கண்கள் ஏங்கின என் ப்ரியாவுக்காக!
நல்ல தூக்கம்,என்னைத் தட்டி எழுப்பினார்கள்,ஓரு அறைக்குள் இழுத்துச் சென்றனர். அங்கே சாதுவாய் அமர்ந்திருந்தான் என் நண்பன் பிரவின்!! துரோகி! ஓரு வெள்ளை கோட்டு போட்ட ஆசாமி என்னைப்பார்த்து சிரிக்கிறான்! சந்தோஷ்! எங்க இருக்கிங்கன்னு தெரியுதா? என்றான்!விட்டேத்தியாக்ச்சிரித்தேன் அவனைப்பார்த்து ஏன் என்னை கடத்திய உனக்குத் தெரியதா? என்றேன் .வெளியே அமருங்கள் என்றான்! வெளியே சென்றுவிட்டேன்!
அறைக்கு வெளியே,நாற்காலியில் அமர்ந்தேன்
உள்ளே என்ன நடக்கிறது? இந்த சின்ன சின்ன அறைக்குள் ப்ரியாவை மறைத்து வைத்திருக்கிறார்களா? நேற்று அப்துல் கலாம் என்னிடம் சொன்ன ரகசியத்தைக் கேட்டுச் சித்திரவதை செய்வார்களோ? எங்கேயோ குரல் கேட்கிறது அது என் ப்ரியாவுடையது தான்! ப்ரியா ! ப்ரியா! ஏங்கு இருக்கிறாய் நீ?
அறைக்குள் பிரவின்: நல்லாத்தான் இருந்தான் சார் லண்டன் வந்தபோது , பிறகு தனக்குள் பேசறது சிரிக்கிறது என்று ஆரம்பிச்சுட்டான்!ப்ரியானு ஓரு பொண்ணை காதலிச்சான் ஆனால் அவள் கல்யாணம் ஆகி போன பிறகும் அவ இங்கதான் இருக்கானு ஊளற ஆரம்பிச்சுட்டான்..தனக்குள்ள பெரிய ரகசியம் இருக்கு! அதை தெரிஞ்சுக்க நான் அவ்னை துரத்துறேனு நினைக்கிறான்! நேத்து வீட்டை வீட்டு ஓடிப்போய் தேம்ஸ் நதிக்குள்ள குதிச்சுட்டான்..பெரிய சீக்கல் ஆயிடுச்சு அதான் மறுபடியும் இவனை இந்தியா அழைச்சுட்டு வந்துட்டேன் என்றான் .
இது ஓரு மனநோய் SCHIZOPHRENIA னு சொல்லுவோம் .சந்தோஷ்க்கு இந்த மனநோய் இருக்கு என்றார் அந்த வெள்ளை கோட்டு போட்ட டாக்டர்!

5 Comments:

Blogger Unknown said...

hi..unnoda..siru kadhaiyum nalla than irukku...engala madhiri sadharana vasagarkal purinthukolla siru kadhaigal nalla irukkum...so, continue with your short stories

12:17 PM  
Blogger FunScribbler said...

hey hi viji, i have earlier told u abt this story and comments! it is gr8 that u have posted it in ur blog. this will bring u in many comments. look at them and think upon how u can better improve ur style of writing! one thing to say... THIS IS A VERY GOOD AND BRILLIANT ATTEMPT!! adios.. cheers! looking forward to chat with u soon..hehe..

10:45 AM  
Blogger Unknown said...

hi bharathi..
nalla iruku..

aangila vaarthaigalai konjam kuRaikkalaam..

2:51 AM  
Anonymous Anonymous said...

not bad... good try ...

ennum nanga ethirparkurom.

6:55 AM  
Anonymous Anonymous said...

Nice.
Keep going.
We expecting more...

1:00 AM  

Post a Comment

<< Home