Saturday, August 19, 2006

NATURE POEMS

this is full of poems about nature..have a look.

1.எங்கே அவள்?
IN SEARCH OF MY GAL...
சுடும் வெயில்
வியர்வை அருவி
நெடுஞ்சாலை
மக்கள் கூட்டம்
காதை பிளக்கும்
வாகன சத்தம்
இது
என் நகர வாழ்க்கை
அவளைத் தொலைத்ததால்
நகரும்
நரக வாழ்க்கை!


காட்டுக்குள் சென்றேன்
என் காதலியைத் தேடி!


மலை முகடு...
அதை உரசிச் செல்லும் மேகக்கூட்டம்
மேகக்கூட்டத்தில்...அவள்


புல்வெளி..
புல்லின் மீது கீரிடமாய் பனித்துளி
பனித்துளியில் அவள்


காலைச்சூரியன்...
அவன் கரம் பட்டு சிவக்கும் செவ்வானம்
செவ்வானத்தில் அவள்


காட்டு அருவி
அவன் பாறையுடன் மோதுகையில் தெறிக்கும் சாரல்
சாரலில்...அவள்


உறையும் பனி
அதில் யாரும் அறியாமல் காதை வருடும் தென்றல்
தென்றலில்...அவள்


கார்மேகம்
மழையாய் பூமியைத் தொட தவிக்கையில் எழும் மண்வாசனை
மண்வாசனையில் அவள்


அழகிய பூக்கள்
அதோடு வண்டுகள் பேசும் காதல் வசனம்
காதல் வசனத்தில்...அவள்!


ஒற்றையடிப்பாதை
அங்கே அழைப்புமணியாய் குயிலோசை
குயிலோசையில்...அவள்


எங்கும் அவள்
பச்சைப்பட்டு உடுத்தி
என்னைப் பார்த்து
பரவசமாய் சிரித்தாள்
என் காதலியின்
கரம் பற்றாமல்
கண்ணீரோடு
காட்டைவிட்டு பிரிந்தேன்
என் நகர வாழ்க்கை நோக்கி

என் மனதில்
அவள் நினைவுகள்
கண்மூடினால்
கண் சிமிட்டுகிறாள் அவள்
என் காதலி-இயற்கை















2.AT THE END OF THE DAY-I MET HER


அந்தி வேலைப் பொழுது
அலுவல் முடிவு
அயர்ந்த உடலில்
வியர்வை பூக்கள்
படிகளில் தொங்கியே பல்லவன் பயணம்
முரட்டு வாகனம்
மிரட்டும் சாலையில்
மூக்கை உரசியது
அவள் வாசனை
அண்ணாந்து பார்த்தேன்
கரிய கூந்தலுடன்
என் இனிய காதலி
மெல்ல குனிந்து
முத்தங்கள் பொழிந்தாள்
என்னைத் தீண்டிய
என் செல்ல மழையே

6 Comments:

Blogger பத்மகிஷோர் said...

உங்கள் வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேருங்கள் http://www.thamizmanam.com/

6:17 AM  
Blogger பழனி said...

அழகான மழை கவிதை ... மிகவும் அருமையாக இருக்கிறது ...

தொடர்ந்து எழுதுங்கள் ...

மழை ரசிகன்
./பழனி

8:32 PM  
Blogger வினையூக்கி said...

அருமை கவிதைகள் மட்டும் அல்ல!!!
படங்களும்

12:51 AM  
Anonymous Anonymous said...

kavidaigal arumai...hope u'll not get angry if i tell u onething...there s a mistake in spelling...andhi velai pozhudhu....

5:24 AM  
Anonymous Anonymous said...

kavidaigal arumai...hope u'll not get angry if i tell u onething...there s a mistake in spelling...andhi velai pozhudhu....

5:24 AM  
Blogger Unknown said...

hmm..mazhai kavidhai arumai.

mazhaiyai ezhuthiya mangayai kovai varum podhu santhikka vaendum :)

9:44 PM  

Post a Comment

<< Home