Sunday, August 13, 2006

காதல் கவிதைகள் -this is my first attempt towards romantic poems.read and post ur comments


கனவே கனவே
என் கனவெல்லாம் நீயே
இடியாய் இறங்கி
இதயத்தை உடைத்தாய்

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்

நீ நடக்கும் வீதியில்
தூசு இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை நான் கடந்து போவதால்

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை நான்
தொடருந்து வருவதால்!!

நீ தூக்கி ஏறியும் குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ அது குடி புகுவதால்

நீ வீசும் பார்வை என்னிடம்
வட்டி கேட்கிறது
என்இதய வங்கியில்
அதை சேமிப்பதால்!!

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில் என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

என் வீட்டு சுவருக்கு
வாய் இருக்கிறது
எப்போதும் அதில்
உன் குரல் கேட்பதால்

அடிப்பட்டாலும் இப்போதெல்லாம் அழுவதில்லை நான்
என் கண்ணீர் துளிகளை சேமிக்கிறேன்
உன் பாதம் கழுவ

அடிக்க தோன்றினாலும் யாரையும் அடிப்பதில்லை நான்
என் உள்ளங்கையை பாதுகாக்கிறேன்
உன் பாதம் தாங்க

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும் தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்
என்னைத் தூண்டு தூண்டாக்கிவிட்டு
நீயோ தூரமாய் போகிறாய்

தூக்கத்தை தொலைத்து நான் திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத என் காதல் கடிதங்கள்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையிலே

4 Comments:

Anonymous Anonymous said...

Your first romantic poem is very nice. One sugesstion if you don't mind...I haven't studied your other collections, but in your future romantic poems try to bring the emotions in.... :)
Keep writing. All the best

1:18 AM  
Anonymous Anonymous said...

mmm- unka- kavithajin- unkal- kathalin -irram- terikerathu- athil -nanaithavarkalil- naanum- nanithen -mikavum -nanraka -irukerathu- thudarunkal- nanaivathatkai- nanum -en- kankaluudu- kathirukeren..... -yal_akathian

4:11 AM  
Blogger kaaviyan said...

அருமை.அண்ணாரின் மூலம்தான் தங்களின் தளத்திற்கு வந்தேன்.நான் சொல்ல வந்த பிழையை அவரே சுட்டியுள்ளார்.

4:48 PM  
Blogger Sivakasi Mahesh said...

அருமை !!!

9:43 AM  

Post a Comment

<< Home